Wednesday 18 March 2015

நிலக்கடலை(Peanut or Groundnut) - உணவும் மருந்தும்

நிலக்கடலை(Groundnut) - உணவும் மருந்தும்!

நிலக்கடலை:
     நிலக்கடலை என்பது நிலத்தில் மண்ணுக்குள் விளைவதால் இதை நிலக்கடலை என்கிறார்கள். இதற்கு வேர்க்கடலை என்ற பெயரும் உண்டு. இது அதிக சத்துக்கள் நிறைந்தது. 



நிலக்கடலையில்(100 கிராமில்) அடங்கியுள்ள சத்துக்கள்:

  • கார்போஹைட்ரேட் - 21 மி.கி.
  • கரையும் கொழுப்பு - 40 மி.கி.
  • புரதம் - 25 மி.கி.
  • நார்ச்சத்து - 9 மி.கி.
  • லூசின் - 1.625 மி.கி.
  • லைசின் - 0.901 கி.
  • கிளைசின் - 1.512 கி.
  • ஐசோலுசின் - 0.85 மி.கி.
  • ட்ரிப்டோபான் - 0.24 கி.
  • திரியோனின் - 0.85 கி.
  • குலுட்டாமிக் ஆசிட் - 5 கி.
  • விட்டமின் - பி1, பி2, பி3, பி5, பி6, மற்றும் சி.
  • கால்சியம் - 93 மி.கி.
  • காப்பர் - 11.44 மி.கி.
  • இரும்பு - 4.58 மி.கி.
  • மாங்கனீஸ் - 1.934 மி.கி.
  • மெக்னீசியம் - 168 மி.கி.
  • பாஸ்பரஸ் - 376 மி.கி.
  • பொட்டாசியம் - 705 மி.கி.
  • சோடியம் - 18 மி.கி.
  • துத்தநாகம் - 3.27 மி.கி.
  • நீர்ச்சத்து - 6.50 கி.
  • மேலும் இதில் போலிக் ஆசிட் சத்துக்களும் அதிகமாக உள்ளது.

இதயம் நோய் வராமல் காக்க: 

     நிலக்கடலையில் கொழுப்பு சத்து அதிகம் அதனால் குண்டாகிவிடுவார்கள், இரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் என்பது உண்மையல்ல. நிலக்கடலை இதயத்திற்கு நல்ல சத்துக்களை வழங்கும் உணவாகும். 
நிலக்கடலையில் ரெஸ்வெர்ட்ரோல்(Resveratrol)  என்ற சத்து உள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட்டாக இருக்கிறது. இந்த சத்து இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதனால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. 

பெண்களுக்கு சிறந்த உணவு: 
     நிலக்கடலையில் அதிக அளவில் போலிக் ஆசிட் சத்துக்கள் உள்ளது. இது பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் அதிகம் பயன்படும் சத்தாகும். மேலும், கர்ப்பப் பை சீராக செயல்படுவதற்கு உதவுகிறது. இது கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகளை வராமல் தடுக்கிறது. குழந்தை பேறு ஏற்பட உதவுகிறது. 
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இரு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளதை கவனிக்க வேண்டும். 
நிலக்கடலையின் பிற பயன்கள்:
மூளை, ஞாபக சக்திக்கு:
     நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றுகிறது. இதிலுள்ள விட்டமின் 3 நியாசின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு ஞாபக சக்தியை அதிகப்படுத்துவதுடன், மூளையின் இரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துகிறது.
இளமைக்கு:

நிலக்கடலையிலுள்ள பாலிபினால்ஸ் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும், இளமையையும் தருகிறது.


உணவு அரசியல்:
     பல நல்ல உணவுகள் திட்டமிட்டு அமெரிக்க, இஸ்ரேலிய நிறுவனங்களால் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தாமல் தடுத்து அதன் மூலம் மருந்து, மாற்று உணவு வழங்குதலின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. அது போலவே நிலக்கடலையில் அதிக கொழுப்பு உள்ளது. அதை சாப்பிட்டால் அதிகம் குண்டாகி விடுவார்கள், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என பிரச்சாரம் செய்து இந்தியர்களின் நிலக்கடலை உபயோகத்தை குறைத்துவிட்டார்கள். ஆனால் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலை 15% இடத்தை பெறுகிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிக இதய நோயாளிகள், குழந்தை பேறு இல்லாத பெண்கள் என பிரச்சினை ஏற்படுகிறது இதற்கு அவர்களின் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்துகளை விற்பதன் மூலம் அதிக லாபத்தை அடைகிறது. இது அமெரிக்க உணவு அரசியலாகும். அது வளரும் நாடுகளிலும், மக்கள் தொகை மிக்க நாடுகளிலும்  ஊடகங்கள் மற்றும் அவர்களின் அடியாள் விஞ்ஞானிகள் மூலம் பரப்புரை செய்து தனது உணவு அரசியலை நிலை நிறுத்துகிறது.

நிலக்கடலை உணவுகள்:
கடலை மிட்டடாய்- நிலக்கடலை மற்றும் வெல்லம் சேர்ந்தது.

நிலக்கடலை துவையல்:
       தேவையான பொருட்கள்:

  • நிலக்கடலை - 200கிராம்.
  • மிளகாய் - 3
  • புளி - சிறிது
  • பூண்டு - 3 பல்
  • பெருங்காயம் - சிறிது
  • உப்பு - தேவையான அளவில்
     நிலக்கடலையை வறுத்து எடுத்து அதனுடன் மேற்கண்ட பொருட்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான துவையல் தயார் தேங்காய் சேர்த்தும் துவையல் செய்யலாம். 

நிலக்கடலை சோறு:
       தயிர் சோறு, எலுமிச்சை சோறு செய்ய தாளிக்கும் போது நிலக்கடலையை வறுத்து உடைத்து சேர்க்கலாம். உணவின் சுவை கூடும். 
சத்து மாவு:
     சத்து மாவு தயாரிக்கும் போது மற்ற தானியங்களுடன் நிலக்கடலையை சேர்த்து செய்யும் போது சுவை கூடுவதுடன் அதன் சத்துக்களும் கூடுகிறது இது குழந்தைகளுக்கு சிறந்த உணவாகிறது. 


Saturday 31 January 2015

பனை மரங்கள் காக்க சட்டம் வேண்டும்!

பனை மரங்கள் காக்க சட்டம் வேண்டும்!

தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 40% தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது ...
இன்று என்னுடன் பணீபுரியும் சகோ.பாஸ்கரிடம் பனை மரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதிர்சியுட்டும் செய்தி ஒன்றை சொன்னார் அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் பகுதி நேரமாக செய்து வருகிறார். சமீபத்தில் அவர் விற்றுக் கொடுத்த இடத்தில் 100 பனை மரங்கள் இருந்ததாம். வாங்குபவர்கள் மரங்களை வெட்டச் சொல்லிவிட்டதால் இடத்தின் உரிமையாளர் 100 பனை மரங்களையும் வெட்டிவிட்டாராம். இது நடந்தது படப்பைக்கு அல்லது கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள ஒரத்தூரில்...

இப்படி தமிழகத்தின் பல ஊர்களில் மரங்கள் வெட்டப்படுவது சர்வசாதரணமாகிவிட்டது. ஒரு புறம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டுகிறார்கள். மறுபுறமும் ரியல்எஸ்டேட்காரர்கள் வெட்டுகிறார்கள். ஏன் அரசு இதை தடுக்க சட்டம் கொண்டுவரக்கூடாது.

பனை மரங்களை மட்டுமல்ல புளியமரங்கள், இன்ன பிற மரங்களையும் வெட்டி இடங்களை விற்கின்றனர். அதற்கு பின்னர் பல ஆண்டுகளாக அந்த இடங்கள் வெற்று நிலமாகவே இருக்கிறது. இதனால் சுற்றுப்புறச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணத்தைச் சொல்லும் ரியல் எஸ்டேட்காரர்கள்,''மரங்களை வெட்டினால் தான் மனைபிரிவுகள் அமைக்க அனுமதி கிடைக்கிறது" என்கிறார்கள். அப்படியானால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசு ஏன் கூவுகிறது? வனத்துறையினர் சட்டங்களை எளிமைப்படுத்தவேண்டும். அதாவது, ஒரு இடத்தில் அவர்கள் வீடு கட்டும் வரை அதிலுள்ள மரங்களை வெட்டக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும். அதனால் மரங்கள் பாதுகாக்கப்படும்.

அரசு அவசரமாக இந்த சூழலைப் புரிந்து கொண்டு சட்டமியற்றி தேவையில்லாமல் மரங்கள் வெட்ப்படுவதை தடுக்க வேண்டும். அதே போல் பனை வாரியத்தை சீரமைத்து பனைத்தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் பனை மரங்களை அதிகம் உருவாக்கலாம். பனையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்தலாம்.

Saturday 10 January 2015