Saturday 6 January 2018

பெயர் மாற்றம் செய்வது எப்படி?


       பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில்பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்துவாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திராகுமார் என்றிருத்தல்) ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில்விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறுவிண்ணப்பிப்பது? பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்கவேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினைநிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின்புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி,தமிழக / மத்திய அரசின் ‘அ’
மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்துசான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து,தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்குஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/ வாக்காளர்அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டஇருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலைஇணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர்மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலைஇணைக்க வேண்டும்.
மதமாற்றத்தால் பெயர் மாற்றம் செய்பவர்கள் அந்தந்த மதத் தலைவர்கள், குருமார்கள், முத்தவல்லிகள், பாதிரியார்களிடம் சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் கூடுதலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம்
9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்
.தமிழில் பெயர் மாற்றக்
கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் +
அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம். அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர்(வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்
செலுத்தலாம். பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்கவேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழையபெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’என்று பிரசுரிக்கஇயலாது.பிரசுரம்
செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றைஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின்பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும்கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும்கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்படமாட்டாது. இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?

அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில்வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும். தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரியநபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து ,தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப்பெற்றுச் செல்லலாம். விண்ணப்பத்தில் கையெழுத்திடு முன்: சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரியஇடத்தில் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor)இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமேகையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின்அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல்(Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்படவேண்டும். கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/ தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிடவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: உதவி இயக்குநர் (வெ), சென்னை-2
இல் 2852 0038, 2854 4412 மற்றும் 28544413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
படிவங்களை தரவிறக்கம் செய்ய...for download click below>>
www.stationeryprinting.tn.gov.in/forms.htm >என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

Friday 5 January 2018

தமிழ் தட்டச்சு பழக...

கணிணி உலகில் வாழும் நாம் நம் மொழியில் தட்டச்சு செய்ய பழகியுள்ளோமா? இங்கிலாந்தில் ஒருவன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரியாமல் விழிப்பானா? ஆனால் நாம் விழிப்போம். காரணம் நம்மிடையே எப்போதும் உள்ள ஆர்வமின்மையும், மொழியின் மீதான பற்றுதல் குறைவுமே ஆகும். மொழிப்பற்று என்பது வெறி அல்ல. அது அன்பு, அது ஒரு நேசம், நாம் நம் மொழியைக் காதலிக்க வேண்டும் . அப்போது தான் அதை அழகுற ரசிக்க இயலும். எனவே மொழி வெறியை விட்டு விட்டு மொழியின் மீதான அன்பை செலுத்துங்கள். அதை கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். அது நமது தாய் மொழி எனவே அதனை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள். இந்த கணிணி உலகில் நம் மொழியை அழகாக தட்டச்சு செய்ய கற்போம் வாருங்கள்.

aasan tamil typing tutor