Wednesday 14 March 2018

முருங்கைப் பூ


முருங்கைப் பூ

முருங்கை, ஏராளமான சத்துக்களின் புகலிடமாகத் திகழ்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்ஃபர் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் புரதச்சத்துக்களும், உடல் நலத்துக்கு உதவும் கொழுப்பு அமிலமான ஒலீயிக் அமிலமும் (Oleic acid) இதில் அடங்கியுள்ளன. ஆனாலும்கூட, முருங்கையின் பலன்களை நாம் முழுமையாகப் பெறுவதில்லை.

இதில் இருந்து கிடைக்கக்கூடிய இலை மற்றும் காய்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். பெரும்பகுதி விரயம் செய்யப்படுகிறது.
பூ மற்றும் விதைகள் முற்றிலுமாகவே கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. முருங்கைப் பூ, காய், விதை, இலை அனைத்தையுமே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முடியும்.
முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் அதிக நாட்டம் உண்டாகும்.

முருங்கைப் பூ தேநீர்:

முருங்கைப் பூவை உலர வைத்து, தூளாக்கி, தேயிலை போல் பயன்படுத்தலாம். முருங்கைப் பூ தேயிலை, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

சித்தர்கள் முருங்கை குறித்து பாடியுள்ளனர்.

அகத்தியர் குணபாடத்தில்,
"விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி."

என்று பாடியுள்ளார்.

பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
ஆண்களுக்கு:
உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

குழந்தைகளுக்கும் இது அதிக இரும்புச்சத்துகொண்டதால் நல்ல பலனளிக்கும். ஞாபக சக்தியை பலப்படுத்தும். கண்களுக்கும் நல்ல சக்தியைத் தரும். 

No comments:

Post a Comment